காரில் இருந்து வீசப்பட்ட குழந்தை கொடூர சாவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:ஓடும் காரில் இருந்து ஒரு பெண், பச்சை குழந்தையை வீசி எறிந்தார். அந்தக் குழந்தை வாகனங்களில் அடிபட்டுஉயிரிழந்தது.
திண்டிவனம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி ஒரு கார் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கம் அருகே அந்த கார் சென்ற போது காரில் இருந்த பெண், பிறந்துஒருநாளே ஆன குழந்தையை கார் கண்ணாடி வழியாக வெளியே வீசினார்.
இதில் குழந்தை பின்னால் வந்த வாகனங்களில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு குழந்தையின் உடல் சிதைந்ததுவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
குழந்தையை வீசிய பெண் அதே காரில் தப்பிவிட்டார். அந்தப் பெண்ணையும் காரையும் அடையாளம் காணும்பணி நடக்கிறது.












Click it and Unblock the Notifications