ஜப்பானின் பயங்கர நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை
டோக்கியோ:ஜப்பானின் கடல் பகுதியில் இன்று மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.4புள்ளிகளாக இது பதிவாகியுள்ளதால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
![]() |
வட பசிபிக் கடலில் ஜப்பானின் குரில் தீவுகளுக்கு கிழக்கே இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்துஜப்பானின் கிழக்குப் பகுதி, ரஷ்யாவின் தென் கிழக்குப் பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கப்பட்டது.ஜப்பானின் ஹொக்காய்டோ தீவை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதே போல ஹொன்சு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஜப்பானின் வட கிழக்கு கடல் பகுதியை 1 மீட்டர் உயரம கொண்ட சுனாமி தாக்கலாம் எனஜப்பானிய வானிலை ஆய்வு மையம் கூறியது.
மேலும் தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் கடலின் சில தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதைத் தவிர மேலும் அலாஸ்கா, ஹவாஸ் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்தது.
இதற்கிடையே சிறிய அளவிலான சுனாமி அலை ஜப்பானின் ஹோக்கைடோ தீவுப் பகுதியை தாக்கியுள்ளது.ஆனால், இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந் நிலையில் இனிமேல் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அந்த எச்சரிக்கை வாபஸ்பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.













Click it and Unblock the Notifications