ஜெ. மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விவகாரத்தில், முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலையை திறக்க விடாமல் முதல்வர் கருணாநிதி தடுத்து விட்டதாக ஜெயலலிதாகருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் மீது தற்போது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில்அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் தாக்கல் செய்துள்ள மனுவில், 2006, நவம்பர் 23ம் தேதிஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் குறித்து அவதூறான, களங்கம் கற்பிக்கும் வகையிலானவாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

முதல்வர் கருணாநிதியின் புகழைக் குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் ஜெயலலிதா. எனவே அவர்மீது ஐ.பி.சி. 500, 501ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+