எஸ்.ஐ.யை அடித்த ஏட்டய்யா கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில், சப் இன்ஸ்பெக்டரை அடித்த தலைமைக் காவலர் கைதுசெய்யப்பட்டார்.
பரங்கிமலை ஆயுதப் படையில் தலைமைக் காலவராக இருப்பவர் சத்தியநாராயணன்.இவர் குடித்து விட்டு வேலைக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர்பரமசிவம், அவரைக் கண்டித்துள்ளார்.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளார்சத்தியநாராயணன். அப்போது கோபத்தில் பரமசிவத்தை சரமாரியாக அடித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பரமசிவம் இதுகுறித்து மேலிடத்தில் புகார் கொடுத்தார். நடந்தசம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அதில் சத்தியநாராயணன் மீது தவறுஇருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சத்தியநாராயணன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications