தை பிறந்தால் பதவி கிடைக்கும்: காங். நம்பிக்கை
சென்னை:ஆட்சியில் பங்கு வேண்டும், வாரியத் தலைவர் பதவி வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் ஏக்கம்.இதை மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும், நல்லதே நடக்கும் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும்,வாரியத் தலைவர் பதவிகளைப் பெற வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள், வற்புறுத்துகிறார்கள்.
இதுகுறித்து மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும், நல்லது நடக்கும் எனநம்புவோம்.
3வது அணி அமைக்கப் போவதாக ஜெயலலிதா கூறுகிறார். இது வெறும் பகல் கனவு, நிச்சயம் பலிக்காது.அதேபோல தமிழகத்தில் கூட்டணி மாறும், ஆட்சி கவிழும் என்கிறார். அதுவும் நடக்காது. 5 ஆண்டு காலம் திமுகஆட்சியில் தொடரும்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கு சிலை வைக்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகுறித்து பரிசீலிக்கப்படும் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications