மணமகளை வரவேற்று துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
ஹிஸார் (ஹரியானா):ஹரியானா மாநிலம் ஹிஸார் நகரில், மணமகள் வரவேற்பின்போது மணமகள்வீட்டினர் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டபோது மாப்பிள்ளை வருவதைபுகைப்படம் எடுத்த போட்டோகிராபர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
ஹிஸார் நகரில் ஒரு திருமண நிகழ்ச்சியை கவர் செய்வதற்காக சுனில் என்றபுகைப்படக்காரர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் திருமண நிகழ்ச்சிகளை படம்எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது மணமகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுக் கொண்டிருந்தார். அதைசுனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
மணமகளை வரவேற்கும் விதமாக அவரது உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு குண்டு சுனில் மார்பில் பாய்ந்தது.
இதில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்து போனார் சுனில். சுனில் இறந்த செய்திபரவியதும் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications