காணும் பொங்கல்: மெரீனாவில் ஜனக் கடல்!
சென்னை:காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் குவிந்ததால் சென்னை மெரீனா கடற்கரை ஜன சமுத்திரமாக மாறிக்காணப்படுகிறது.
பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான இன்று காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்துஇன்று காலை முதலே சென்னை நகர மக்கள் கடற்கரைகளிலும், பொழுதுபோக்கு ஸ்தலரங்களிலும், தீம்பார்க்குகள் உள்ளிட்ட இடங்களிலும் குவியத் தொடங்கினர்.
குறிப்பாக மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை, நீலாங்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை எனஎங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக இருக்கிறது.
இதுதவிர விஜிபி, கிஷ்கிந்தா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் மக்கள்வெள்ளம் அலை மோதுகிறது.
மேலும் மகாபலிபுரத்திலும் மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.
திருச்சியில் முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் மக்கள் அலை மோதுகின்றனர். காவிரிக் கரையோரமும் மக்கள் கூடிகுடும்பத்தோடும், உற்றார், உறவினர்கள், நண்பர்களோடு காணும் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காணும் பொங்கல், கனி காணும் நாளாக கொண்டாடப்படுகிறது. வீட்டில் பூஜைஅறையில் பல வாழைக் கனிகளை வைத்து அவற்றைப் பார்த்தால் இந்த ஆண்டு முழுவதும் சுபிட்சமாக இருக்கும்என்பது நம்பிக்கை.
கடற்கரைகளில் அதிக அளவு மக்கள் கூடியுள்ளனர் என்பதால் தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸார் பாதுகாப்புநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரீனாவில் 5,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications