திமுக கூட்டணி ஷொட்டு-கேப்டன் கொட்டு!
சென்னை:தமிழக சட்டசபையில் இன்று இடம் பெற்ற ஆளுநர் உரையை திஐக கூட்டணிக்கட்சிகள் பாராட்டியுள்ளன. எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
ஆளுநர் உரை குறித்து காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சுதர்சனம் கூறுகையில், காவிரி,முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில்அணுகியுள்ளனர்.
அரசு நிலத்தில் 10 ஆண்டுகளாக குடியிருக்கும் ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டாவழங்குவது, கல்வி வளர்ச்சிக்கு உரிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவது,அமைப்பு சாரா தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் வழங்குவது,பள்ளிகளில் கம்ப்யூட்டர் வழங்குவது ஆகியவை பாராட்டுக்குரிய திட்டங்கள்.
சென்னையில் மெட்ரோ ரயிலை கொண்டு வருவது குறித்து குறிப்பிட்டுள்ளனர். இந்தஆளுநர் உரை, தமிழகத்தை அதி வேகமாக கொண்டு செல்ல உதவும் புல்லட் ரயில்என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், இதுவரை என்ன செய்யப்பட்டுள்ளது.இனிமேல் என்ன செய்யப் போகிறது, என்ன செய்ய வேண்டும் என்ற அரசின் 3நிலைகளையும் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக ஆளுநர் உரை அமைந்துள்ளதுஎன்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுகையில், மக்களுக்கான உருப்படியான திட்டங்கள்எதுவும் இல்லை. பத்திரிகைகளில் வந்த செய்தித் தொகுப்புகளைத்தான் ஆளுநர்உரையில் குறிப்பிட்டுள்ளனர் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளனர். எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறுதிட்டங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications