மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிட தடை நீக்கம்
சென்னை:சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிட விதிக்கப்பட்டிருந்ததடையை நீக்கும் சட்டத் திருத்தம் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுநிறைவேற்றப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படிசென்னை மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு ஒருவரே மீண்டும்போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
ஆனால் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளில்மேயர், துணை மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிடலாம் என அந்த சட்டத்திருத்தத்தில் தெ>விக்கப்பட்டிருந்தது.
இந்த பாரபட்சத்தை நீக்கும் பொருட்டு இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின்,சட்டசபையில் ஒரு திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீது ஸ்டாலின் பேசுகையில், கடந்த 2005க்கு முன்பு இருந்ததைப் போலசென்னை மாநகராட்சியில் மாதம் ஒருமுறை மாமன்றக் கூட்டம் கூட்டப்படும். கடந்தஅதிமுக ஆட்சியில் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடைபெறும் என்ற நடைமுறைரத்து செய்யப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் ஒருவரே மீண்டும்போட்டியிட இருந்த தடை நீக்கப்படுகிறது. இனி அனைத்து மாநகராட்சிகளிலும்மேயர், துணை மேயர் பதவிக்கு ஒருவரே மீண்டும் போட்டியிடலாம்.
அடுத்தடுத்து 3 முறை மாமன்றக் கூட்டத்திற்கு வராத உறுப்பினர்களை தகுதி நீக்கவும்சட்டத் திருத்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது என்றார். பின்னர் இந்த திருத்த மசோதாநிறைவேற்றப்பட்டது.
ஸ்டாலின் மீண்டும் மேயர் பதவிக்கு வருவதைத் தடுக்கும் வகையிலேயே கடந்தஅதிமுக ஆட்சியில் மீண்டும் போட்டியிடத் தடை விதிக்கும் சட்டத் திருத்தத்தைஅதிமுக அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னை மாநகராட்சியில் சர்ச்சைக்குள்ளான 98 கவுன்சிலர்கள் ராஜினாமாசெய்துள்ள நிலையில், மேயர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த மா.சுப்பிரமணியன்மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விரைவில் மாமன்றக் கூட்டம் கூட்டப்பட்டு மேயரின் ராஜினாமாகடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications