அரசு வசம் கேபிள் டிவி-புதுவை திமுக கோரிக்கை
புதுச்சேரி:தமிழகத்தில் கேபிள் டிவி நிறுவனங்களை அரசே கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்புதெரிவித்த நிலையில் புதுவையைச் சேர்ந்த தி.க கவுன்சிலர் ஒருவர் கேபிள் டிவி நிறுவனங்களை அரசேகையகப்படுத்த வேண்டும் என அம்மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுவையைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் நந்தா கலைவாணன் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தின் ஒவ்வொருபகுதியிலும் ஒரு மாதிரியான கட்டணத்தை கேபிள் டிவிகாரர்கள் வசூலிக்கின்றனர். சில இடங்களில் 200 ரூபாய்வரை வாங்குகிறார்கள்.
எத்தனை இணைப்புகளை தாங்கள் வைத்துள்ளோம் என்ற விவரத்தை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசுக்குத்தருவதில்லை. இதைக் கூறாமல் வரி ஏய்ப்பு செய்கின்றனர்.
எனவே மாநிலம் மழுவதும் ஒரே கட்டணத்தை வசூலிக்க ஆபரேட்டர்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.அதற்கு அவர்கள் ஒத்து வராவிட்டால் கேபிள் டிவி நிறுவனங்களை அரசே கையகப்படுத்த வேண்டும். இதனால்அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்றார் நந்தா.
தமிழகத்தில் கேபிள் டிவி சட்ட மசோதாவை கடந்த அதிமுக ஆட்சி சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்குஅனுப்பி வைத்தது. இதையடுத்து உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு விரைந்து சென்ற திமுக தலைவர்கருணாநிதி, இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தார்.
மேலும், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், கேபிள் டிவி சட்ட மசோதா கைவிடப்படுவதாகவும்அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த நிலையில் புதுவையில் கேபிள் டிவி நிறுவனங்களை அரசுகையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை திமுகவிலிருந்தே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications