ஆடிட்டர்: மனுவை வாபஸ் பெற்ற ஜெயேந்திரர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கை தமிழகத்திலிருந்து வேறுமாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஜெயேந்திரர்வாபஸ் பெற்றார்.

சென்னையில் சங்கர மட பக்தர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணனும், அவரது மனைவியும்வீடு புகுந்து ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயயேந்திரர் மீதுஅதிமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கை வெளி மாநிலத்திற்கு மாற்றியதைப்போல இந்த வழக்கையும் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி இந்தவழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயேந்திரர்உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா ஆட்சியில் தனக்கு நீதி கிடைக்காது என ஜெயேந்திரர் தனது மனுவில்கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாத்தூர் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அடங்கியபெஞ்ச், இரு வழக்குகளும் வேறு வேறானவை. மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்(ஜெயலலிதா ஆட்சி போய்விட்டது) ஏற்பட்டுவிட்ட நிலையில் ஜெயேந்திரரின் மனுஅர்த்தமில்லாததாகிவிட்டது என்றனர்.

இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என ஜெயேந்திரரின்வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர். இதையடுத்து அந்த மனுவாபஸ் பெறப்பட்டது.

இதைத் தொடர்ந்து விரைவில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆடிட்டர்ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+