ஆசிரியைக்கு பளார்! 3 மாணவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:படித்த பள்ளிக்கூடம் மீது கல்வீசி ரகளை செய்த 3 மாணவர்களை கண்டித்தஆசிரியையின் கன்னத்தில் அவர்கள் அறைந்தனர். அந்த 3 முன்னாள்மாணவர்களையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை விருகம்பாக்கம் ஏவி.எம் காலனியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிஉள்ளது. இப்பள்ளியில் கடந்த 17ம் தேதி சிலர் கல்வீசி ரகளை செய்தனர்.

இதையடுத்து ஆசிரியை ஆனி (வயது 54) வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது3 பேர் குடிபோதையில் கல்வீசித் தாக்கியது தெரிய வந்தது.

அவர்களில் சம்பத்குமார், நரேந்திர குமார் ஆகிய இரு இளைஞர்களும் அதேபள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள். இன்னொருவரான ஜோசப் வேறுபள்ளியில் படித்தவர்.

முன்னாள் மாணவர்களே இவ்வாறு செய்வதைப் பார்த்து அதிர்ந்த ஆசிரியை ஆனி,அருகில் சென்று இது நீங்கள் படித்த பள்ளி, உங்கள் வீட்டின் மீதே இப்படி கல் வீசிஅசிங்கப்படுத்தலாமா என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு கோபமடைந்த 3 பேரும் ஆசிரியை ஆனியின் கன்னத்தில்அடித்துள்ளனர். இதை எதிர்பாராத ஆசிரியை ஆனி அதிர்ச்சியில் தலை சுற்றி மயங்கிசுவரைப் பிடித்து சிறிது நேரம் நின்று விட்டார்.

பின்னர் பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் விரைந்து வந்து அவரை உள்ளேஅழைத்துச் சென்றனர். இதுகுறித்து ஆனி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் 3இளைஞர்களையும் கைது செய்தனர். இவர்களில் நரேந்திரகுமார் பி.காம் படித்துவருகிறார். மற்ற இருவரும் வீட்டில் சும்மா இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+