For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளி மேற்கூரை இடிந்து 25 குழந்தைகள் காயம்

By Staff
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் தனியார் நர்சரி பள்ளிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில்25 குழந்தைகள் காயமடைந்தனர்.

திருக்கோகணம் பகுதியில் ஒரு தனியார் நர்சரிப் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி.ஆகிய வகுப்புகள் ஓட்டுக் கொட்டகையின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தஓடுகள் நீண்ட காலத்திற்கு முன்பு போடப்பட்டவையாகும்.

திங்கள்கிழமை திடீரென ஓட்டுக் கொட்டகையை தாங்கி நின்ற மூங்கில் கம்புஉடைந்து விழுந்தது. இதையடுத்து ஓடுகள் சடசடவென சரிந்து விழுந்தன.

இதில் 25 மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்தனர். இவர்களில்17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்தது அவர்கள் அரசு தலைமைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் சீரு, ஆர்.டி.ஓ தமிழமணி உள்ளிட்டோர் காயமடைந்தமாணவர்களை சந்த்தினர். இச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்துக்குப் பின்னர் கீற்றுக் கூரைகளை வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் நடத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து பள்ளிக் கூட்களில் இருந்த கீற்றுக் கூரைகள் மாற்றப்பட்டன. ஆனால்தற்போது ஓடு விழுந்து பிஞ்சுக் குழந்தைகள் 25 பேர் காயமடைந்துள்ளதுபெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X