மீண்டும் மீண்டும்.. அதிமுக, மதிமுக வெளிநடப்பு
சென்னை:சட்டசபையிலிருந்து அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் இன்றும் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குப்பணிந்து முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். தேர்தல் ஆணையர், டிஜிபி,காவல்துறை ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகியோர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும். அதுவரைசட்டசபைக் கூட்டத்தைப் புறக்கணிப்போம் என அதிமுக அறிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக இதுகுறித்து விவாதிக்கக் கோரி சபையில் போராட்டம் நடத்திய அதிமுக உறுப்பினர்கள்அதற்கு சபாநாயகர் அனுமதிக்காததால் வெளிநடப்புச் செய்தனர். அவர்களுடன் மதிமுக உறுப்பினர்களும்வெளிநடப்பு செய்தனர்.
இந் நிலையில் இன்றும் 3வது நாளாக அதிமுக மற்றும் மதிமக உறுப்பினர்கள் இப்பிரச்சினையை எழுப்பினர்.கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால்கேள்வி நேரத்தை ரத்து செய்யக் கோருவது முறையல்ல, மரபு மீறிய செயல் இது என்று சபாநாயகர் கடுமையாககூறினார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்களும், மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்து விட்டு வெளியேறினர்.












Click it and Unblock the Notifications