பண மோசடி நடிகர் பாண்டியனுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவைச் சேர்ந்தநடிகர் பாண்டியனுக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
![]() |
வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்து விட்டதாக பாண்டியன் மீது புகார் கொடுக்கப்பட்டது.அதன் பேரில் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பாண்டியன் சார்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. பாண்டியன் சார்பில் அதிமுக எம்.எல்.ஏ. பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதி பெரிய கருப்பையா, ரூ. 5,000 சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர்ஜாமீனில் பாண்டியனை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
3 வாரங்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும்நிபந்தனை விதித்தார்.













Click it and Unblock the Notifications