சென்னையில் நூதன கொள்ளை கும்பல் கைது!
சென்னை:பைக்குகளில் செல்பவர்களை வழிமறித்து கொள்ளையடித்து வந்த 10 பேர் கொண்ட கும்பலை போலீஸார்பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.
![]() |
சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நூதன முறையில் வழிப்பறி செய்யும் கும்பல்கள் பெருகி விட்டன.இந்தக் கும்பலின் குறியே மோட்டார் சைக்கிளில் தனியாக செல்வோர்தான்.
திடீரென்று நம்மை நிறுத்தி டயரில் காற்று வீக்காக இருப்பது போல தெரிகிறது, ஆயில் ஒழுகுகிறது என்பதுஉள்ளிட்டவற்றை சொல்லி நமது கவனத்தை திசை திருப்புவது இவர்களது தொழில் உத்தி.
வாகனத்தை ஓட்டி வருபவர் குழப்பமாவதைப் பயன்படுத்தி செல்போனையோ அல்லது வைத்திருக்கும்பொருட்களை பறித்துக் கொண்டு இந்தக் கும்பல் தப்பி விடும். இப்படிப்பட்ட திருட்டுத்தனத்தை செய்து வந்த 10பேர் கொண்ட கும்பலை போலீஸார் பிடித்துள்ளனர்.
தென் சென்னை காவல் இணை ஆணையர் துரைராஜ் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார்இந்தக் கும்பலைப் பிடித்தனர். இவர்களில் கோவிந்தன், சுதா, தமீம், கார்த்திக், ஜமால் ஆகியோர்தேனாம்பேட்டை, மாம்பலம், பாண்டி பஜார், நுங்கம்பாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் பிடிபட்டனர்.
இவர்களிடமிருந்து 10 மோதிரங்கள், 5 தங்கச் சங்கிலிகள், 9 செல்போன்கள், 11 ஆயிரத்து 100 ரூபாய் பணம், 1கைக்கடிகாரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல திருட்டுக் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த தினகர், செந்தில்குமாரையும் போலீஸார்பிடித்தனர். 2 மாருதி கார்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், 3 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கீழ்ப்பாக்கம் பகுதியில் டேனியல், சுதிர், சேகர் ஆகிய 3 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்தும் நகைகள், பணம்பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பத்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும்.
இவர்களில் செந்தில்குமார், கோவிந்தராஜ், ஜமால் ஆகியோர் ஏற்கனவே 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்கைதாகி உள்ளே சென்றவர்கள். சுதாகர் ஒரு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications