தினகரன் Vs
தேனி:தேனியில் அதிமுகவினருக்கும் ஜெயலலிதா பேரவையினருக்கும் இடையே பயங்கர கோஷ்டி மோதல் நடந்தது.இதில் பலர் காயமடைந்தனர்.
அதிமுகவில் சசிகலாவின் ஆட்கள் தான் அதிகாரம் செலுத்தி வருகின்றனர். கட்சியின் பொருளாராகவும்ராஜ்யசபா எம்பியாகவும் சசியின் அக்காள் மகன் தினகரன் உள்ளார்.
இந் நிலையில் சசியின் அண்ணன் மகன் மகாதேவனுக்கு ஜெயலலிதா பேரவைத் தலைவர் பதவிவழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போயஸ் தோட்டத்தில் தினகரனின் செல்வாக்கு சரிய ஆரம்பித்து, மகாதேவன் கை ஓங்கியுள்ளது.இதையடுத்து இருவருக்கும் இடையே கோஷ்டி பூசல் தலையெடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் மகாதேவன் சுற்றுப் பயணம் நடத்தி ஜெயலலிதா பேரபை நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.அவருக்கு அதிமுகவினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் தினகரனின் ஏரியாவான தேனியில் ஜெ பேரவை கூட்டத்தைக் கூட்டினார் மகாதேவன். அப்போதுஇக் கூட்டத்தில் தினகரனின் ஆட்கள் புகுந்து கலாட்டா செய்தனர்.
தினகரன் கோஷ்டியை சேர்ந்ச அதிமுக ராஜ்யசபா எம்பியும் மாவட்டச் செயலாளருமான தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர்களும் கம்பத்தை சேர்ந்தவர்களும்போராட்டத்தில் இறங்கினர்.
இவர்களை மகாதேவனின் ஆட்கள் நையப் புடைத்து கூட்டத்தை விட்டு வெளியேற்றினர்.
இந் நிலையில் தாங்கள் தாக்கப்பட்டதாக இரு தரப்பினரும் போலீசில் புகார் கொடுத்து கட்சியின் பெயரைநாறடித்து வருகின்றனர். போலீசாரும் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப் போட்டுவிட்டு யாரை கைதுசெய்வது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications