கெட்டுப் போன சாம்பார்-மாணவர்கள் மயக்கம்!
பள்ளிப்பட்டு:ஆந்திராவில், திருமண விருந்தில் மீதமான, கெட்டுப் போன சாம்பார், ரசத்தை பள்ளிமாணவ, மாணவியருக்குக் கொடுத்ததால் 114 பேர் மயங்கி விழுந்தனர்.
சித்தூர் மாவட்டம் பேட்டா கிராமத்தில் திருமண விழா ஒன்று நடந்தது. விருந்தில்பரிமாறப்பட்ட சாம்பார், ரசம் போன்றவை பெரிய அளவில் மீதமானது.
இதையடுத்து அதை அப் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்குகொடுத்துள்ளனர். ஆனால் அந்த சாம்பாரும், ரசமும் கெட்டுப் போயிருந்தது. அதைசாப்பிட்ட 114 மாணவ, மாணவியரும் மயங்கி விழுந்தனர். வாந்தி, வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.
இதையடுத்து அப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவ, மாணவியர்உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களின் அலட்சியம் காரணமாகவே இது நடந்துள்ளது, எனவே அவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் குமுறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications