5 வருடமாக நடந்த ஆயுத கடத்தல்!
சென்னை:தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடந்த ஐந்து வருடங்களாக ஆயுத உதிரி பாக கடத்தல் நடந்து வந்துள்ளதுகியூ பிரிவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் மானாமதுரை அருகே விடுதலைப் புலிகளுக்கு அனுப்பப்படவிருந்த ஆயுதங்களை போலீஸார்பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின்போது ஒரு செல்போன் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்துஅந்த செல்போனுக்கு வரும் அழைப்புகள் உள்ளிட்டவற்றை போலீஸார் கண்காணித்து வந்தனர்.
அப்போது, மும்பையிலிருந்து லாரி மூலம் ஆயுத உதிரிபாகங்கள் (பால் பியரிங்குகள்) சென்னைக்கு கொண்டுவரப்படுவதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் உஷாராயினர்.
கியூ பிரிவு எஸ்.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில்ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியமேடு அருகே வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அந்தலாரியில், 2000 கிலோ எடை கொண்ட 40 மூடை பால் பிய>ங்குகள் இருந்தன.
இந்த பால் பியரிங்குகளைக் கொண்டு கண்ணிவெடிகள், துப்பாக்கிக் குண்டுகளை தயாரிக்க முடியும்.இதையடுத்து மினி லாரியிலிருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இலங்கையைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம்போலீஸார் விசாரணை நடத்தியபோது தூத்துக்குடியில் உள்ள பிரபாகரன் என்பவரது வீட்டிலும் இதுபோல பால்பியரிங் மூட்டைகள் இலங்கைக்கு அனுப்ப காத்திருப்பதாக தெரிய வந்தது.
உடனடியாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸார் உஷார்படுத்தப்பட்டு பிரபாகரன் வீட்டில் சோதனைநடத்தப்பட்டது. பிரபாகரன் வீட்டில் 60 மூட்டை பால் பியரிங் மூட்டைகள் சிக்கின. அவரும் கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பாக இதுவரை சதீஷ், செல்வசேந்தன், யோகராஜா, பாரதி என்கிற பாரதிதாசன், சிவா, ஜெயவேலு,ராஜேத் அகமது, மயில்வாகணன், பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் ஒருவர் தூத்துக்குடி போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது. அவரையும் பிடிக்கபோலீஸார் தீவிர வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
சென்னையில் கைதான 9 பேரிடமிருந்தும் ஒரு டாடா இண்டிகா கார், ரூ. 5 லட்சம் பணம், 3 செல்போன்கள், மினிலாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அனைவரும் நேற்று இரவு சென்னை எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 5 இலங்கைத் தமிழர்களும் விடுதலைப் புலிகள் அல்ல என்றும் புலிகள் அமைப்பின்அனுதாபிகள் எனவும் கியூ பிரிவு எஸ்.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் கூறியுள்ளார்.
ஆயுத உதி> பாகங்கள் பிடிபட்டுள்ளதைத் தொடர்ந்து ராமநாதபுரம், தூத்துக்குடி இலங்கையை ஒட்டியுள்ளகடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications