கருப்பு சட்டை-சேலையில் அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை:தமிழக சட்டசபைக்கு இன்று அதிமுக, மதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து ஆர்ப்பாட்டம்நடத்தினர். பின்னர் வழக்கம் போல இன்றும் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறைக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறைஅமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த 3 நாட்களாக சட்டசபையிலிருந்துஅதிமுக, மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை இரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கருப்புச் சட்டையிலும், பெண்உறுப்பினர்கள் கருப்பு சேலை, ஜாக்கெட்டிலும் வந்தனர்.
அவைக்கு உள்ளே இரு கட்சிகளின் உறுப்பினர்களும் எழுந்து நின்று கருணாநிதி, ஸ்டான்லின் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் இரு கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
சபைக்கு வெளியே வந்த அவர்கள் அங்கு சிறிது நேரம் கோஷமிட்டபடி இருந்து பின்னர் கலைந்து சென்றனர்.நாளை மறுநாளுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications