பாமக பொறுப்புள்ள எதிர்க் கட்சி: ராமதாஸ்
புதுக்கோட்டை:தமிழகத்தில் பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக செயல்படுவோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
திமுகவுக்கு எதிராக அவ்வப்போது குண்டைப் போட்டு வருகிறார் ராமதாஸ். இதனால் அவர் அணி மாறதயாராகிவிட்டதாக திமுக கருத ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் பேசியஅவர்,
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 5ம் தேதி வெளியாகவுள்ளது. நல்ல தீர்ப்பு வரும் எனநம்புவோம். தீர்ப்பு வந்த பின் அதை மத்திய அரசு கெஜெட்டில் வெளியிட வேண்டும். அப்போது தான் அதைசட்டரீதியாக அமலாக்க முடியும்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்துவிட்டோம். காவிரி பிரச்சனையில்அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும்.
காலத்துக்கு ஏற்ப அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என கவர்னர் உரையில் தமிழக அரசு அறிவித்துள்ளதுசரியே. ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். இதனால் பலரது உயிர்களை காப்பாற்ற முடியும்.
தேர்தலுக்கு முன்பே கூறியதைப் போல திமுக ஆட்சியில் பங்கு கேட்கவே மாட்டோம். எதிர்க் கட்சியாக,பொறுப்புடன், தோழமையுடன் செயல்படுவோம் என்றார் ராமதாஸ்.
முன்னதாக பேராவூரணியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் தர்மபுரி, விழுப்புரம்,புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் தொடர்ந்து மிகவும் பின் தங்கியுள்ளன.
இந்தப் பகுதிகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பு திட்டங்கள் போடப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு,தொழில் முதலீட்டில் இந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
தமிழகத்தில் விவசாயிகள் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கு உதவும் என்றுநம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications