நொய்டா: சென்னையில் சிறுவர்கள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:டெல்லி அருகே நொய்டாவில் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துசென்னையில் சிறுவர், சிறுமியர் பங்கேற்ற கண்டனப் பேரணி நடைபெற்றது.
மனித நீதிப் பாசறை என்ற அமைப்பின் சார்பில் இந்தக் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அமைப்பின் சென்னை நகர கிளைத் தலைவர் மொஹைதீன் தலைமையில் வட சென்னையில் உள்ளதண்டையார்பேட்டையில் இப்பேரணி நடந்தது.
இந்தப் பேரணியில் 200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். பேரணியில் மொஹைதீன்பேசுகையில், இந்த கொடூர குற்றத்தை இழைத்த இருவருக்கும் மத்திய மற்றும் உ.பி. மாநில அரசுகள் கடும்தண்டனை வாங்கித் தர வேண்டும்.
நொய்டா சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் நாடுமுழுவதும் உள்ள சிறார்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications