தூக்குக்குடி: 2 பஸ்கள் மோதல்-54 பேர் காயம்
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 54 பேர்காயமடைந்தனர்.
தூத்துக்குடியிலிருந்து நெல்லைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்குதனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
இரு பேருந்துகளும் புதுக்கோட்டையை அடுத்த பொட்டலூரணி விலக்கில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.அதில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் பாளையங்கோட்டை வின்சென்ட் அமல்ராஜ்(30), நடத்துநர் ஆறுமுகம் (45),பயணிகள் உட்பட 23 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல அரசு பேருந்தின் ஓட்டுநர் பண்டாரம் (48), நடத்துநர் முத்துப்பாண்டி(49) உள்ளிட்ட 31 பேர்காயமடைந்து நெல்லை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையிலும், தூத்துக்குடி தனியார் மருத்துவமனையிலும்சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications