தாமரைக்கனி மகன் மீது கொலை வழக்கு!
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவியின் கணவர் கொலை வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின்மகன் தங்கமாங்கனி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்தவர் சுந்தரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவியாக இருந்தார். இவரது கணவர் அண்ணாதுரைசெல்வன், மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.
சனிக்கிழமை இரவு தனக்குச் சொந்தமான லாட்ஜில் அண்ணாதுரை இருந்தபோது அங்கு ஒரு கும்பல் வந்தது.அண்ணாதுரையை சரமாரியாக வெட்டித் தள்ளிய அக்கும்பல், தடுக்க முயன்ற லாட்ஜ் ஊழியர் ராமரையும்வெட்டி விட்டுத் தப்பினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக அண்ணாதுரை செல்வனின் தம்பி திராவிடமணி போலீஸில் புகார் கொடுத்தார்.
அதில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எனது அண்ணன் குடும்பத்திற்கும், தங்கமாங்கனி குடும்பத்திற்கும்இடையே முன்பகை இருந்தது. தங்கமாங்கனி குடும்பத்தினர் தூண்டுதலால்தான் அண்ணாதுரைகொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் தங்கமாங்கனி உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
தங்கமாங்கனியும் அவரது அண்ணன் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழனும் இப்போது திமுகவில் தான்உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications