எப்படி ஓட்டு கேட்கணும்?: ராமதாஸ் யோசனை
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் எப்படி ஓட்டு வேட்டையாட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடந்தது.
சென்னை மாவட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சித் தேர்தல் பாமகவேட்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. ராமதாஸ் கூட்டத்தில் பேசுகையில், நமது இயக்கம் காலம் காலமாக இருக்க வேண்டிய இயக்கம்.
வளர்ச்சிப் பாதையில் பாமக செல்கிறது. வெற்றிப் படிகளில் வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் மெளனத்துடன், எச்சரிக்கையாக செல்கிறோம்.
தமிழ் மொழி, இனம், நாடு ஆகியவற்றை முன்னிறுத்தி செல்லும் முதன்மை கட்சியாக பாமக உள்ளது.
மாநகராட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். பாமக வேட்பாளர்கள் வாக்காளர்களை பலமுறை சந்தித்து ஓட்டு கேட்க வேண்டும். நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என கூறி ஓட்டு கேளுங்கள்.
சரியாக வேலை செய்யாவில்லை என்று என் மீது புகார் கொடுத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறி ஓட்டு கேளுங்கள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications