அக். 2 சர்வதேச அகிம்சை தினமாகுமா?
டெல்லி:மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த சத்தியாகிரக நூற்றாண்டுவிழா கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மகாத்மா காந்தி தொடங்கிய சத்தியாகிரக இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 நாள் கருத்தரங்கம் நடந்தது.
இந்த கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்க வேண்டும் என்பது அவற்றில் முக்கிய தீர்மானமாகும்.
இக்கருத்தரங்கில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆர்ச் பிஷப் டெஸ்மான்ட் டூடு, ஜாம்பியா முன்னாள் அதிபர் கென்னத் கெளண்டா,நோபல் பரிசு பெற்ற வங்கதேச கிராமீன் வங்கித் தலைவர் முகம்மது யூனுஸ், இத்தாலி பிரதமர் பிரான்சிஸ்கோ ரூட்டெலி உள்ளிட்ட 88 நாடுகளைச் சேர்ந்த 300க்கும்மேற்பட்ட பிரதிநிதிகளும், இந்தியப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications