திமுக பிரமுகர் கொலையில் தாமரைக்கனியின் மகன் கைது-மேலும் 3 மகன்களுக்கு வலை!
ஸ்ரீவில்லிப்புத்தூர்:ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சித் தலைவி சுந்தரியின் கணவரும் திமுக பிரமுகருமான அண்ணாதுரை செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கில்தாமரைக்கனியின் 2வது மகன் ஆணழகன் கைது செய்யப்பட்டுள்ளார். மூத்த மகனும் மாஜி மந்திரியுமான இன்பத் தமிழன் மற்றும் மேலும் இருமகன்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுகவில் இணைந்தவர் இன்பத்தமிழன். அவருக்கு சில காலம் முன்னதாக தங்கமாங்கனியும் திமுகவில்இணைந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் அதிமுகவில் இருந்தவரை தாமரைக்கனியும் போட்டி அரசியல்நடத்தி வந்தவர்கள். தாமரைக்கனி திமுகவுக்கு வந்த பின்னரும் அந்த போட்டி தொடர்ந்தது. தாமரைக்கனி இறந்த பின்னர் கேகேஎஸ்எஸ்ஆர் தான்அந்த மாவட்டத்தில் அசைக்க முடியாத அரசியல்வாதியாக உள்ளார்.
இந் நிலையில் திமுகவில் இணைந்துவிட்டாலும் கேகேஎஸ்எஸ்ஆர் தரப்புடன் ஏட்டிக்குப் போட்டி அரசியலில் இன்பத்தமிழனும் தங்கமாங்கனியும்ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் கேகேஎஸ்எஸ்ஆரின் ஆதரவாளரான அண்ணாதுரை செல்வன் கடந்த 27ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகரவிக்குமார், வைரமுத்து ஆகியோரை போலீசார் ரைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கொலையில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முரளி உள்பட மேலும் 5 பேர் சம்பந்தப்பட்டதுதெரியவந்தது. இதையடுத்து முரளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்தக் கொலை குறித்து டிஎஸ்பி சாகுல் ஹமீத் கூறுகையில்,
தாமரைக்கனி குடும்பத்தினருக்கும் அண்ணாதுரைக்கு இடையே உட்கட்சிப் பூசலும் முன் விரோதமும் இருந்து வந்தது. இதனால் தான் இந்தக்கொலை செய்யப்பட்டுள்ளது. அண்ணாதுரை செல்வனை கொலை செய்ய தாமரைக்கனி வீட்டில் தான் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.
இந் நிலையில் தாமரைக்கனியின் 2வது மகனான வழக்கறிஞர் ஆணழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே போல மூத்த மகன் இன்பத்தமிழன், 3வது மகனான தங்கமாங்கனி (இவர் திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்), 4வது மகன்தமிழன்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தக் கொலைக்கு திட்டம் போட்டதோடு, கூலிப் படையைக் கொண்டு இந்தக் கொலையை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications