கால்வாயில் போடப்பட்ட கடத்தப்பட்ட சிறுவன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அருகே மணலியில் ரூ. 5 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட 5 வயது யூ.கே.ஜி. சிறுவனை, காலைக் கட்டி கால்வாயில் போட்டு விட்டுகடத்தல்காரர்கள் தப்பினர்.

Vimalமணலி காமராஜர் தெருவில் வசித்து வருபவர் தானாராம். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் அதே பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவரது 5வயது மகன் விமல். யு.கே.ஜி. படித்து வருகிறான்.

கடந்த 30ம் தேதி தனது வீட்டுக்கு முன்பாக விமல் விளையாடிக் கொண்டிருந்தபோது சிலர் அவனைக் கடத்திச் சென்றனர். பின்னர் தானாராம்வீட்டுக்கு போன் செய்து 5 லட்சம் பணம் கொடுத்தால் விமலை விட்டு விடுவதாக கூறி 8 முறை போன் செய்து மிரட்டினர்.

சிறுவனைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகளை அமைத்த போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். கடத்தல்காரர்கள் பணத்துடன் கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய இடங்களுக்கு வருமாறு கூறியதால், போலீஸ் ஆலோசனைப் படி போலி பணத்துடன் தானாராமின் குடும்பத்தினர்சென்று பார்த்தனர்.

ஆனால் கடத்தல்காரர்கள் பணத்தை வாங்க வரவில்லை. இதனால் அவர்களும், மாறு வேடத்தில் சென்ற போலீஸாரும் ஏமாற்றமடைந்தனர்.ஆனால் கடத்தல்காரர்கள் தானாராம் குடும்பத்துக்குத் தெரிந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என போலீஸார் சந்தேகித்தனர்.

இந்த நிலையில் போலீஸ் பிடி இறுகுவதைக் கண்ட கடத்தல்காரர்கள், நேற்று பிற்பகல் விமலை விடுவித்தனர். அவனது கால்களைக் கட்டி மணலிஎஸ்.ஆர்.எப். தொழிற்சாலையின் பின்புறம் உள்ள மழை நீர்க் கால்வாயில் போட்டு விட்டுச் சென்றனர்.

அவன் அழுவதைக் கேட்டு அங்கு ஓடி வந்த நிறுவன காவலாளி, கால்களை கட்டியிருந்த கயிற்றை விடுவித்து அவனை மணலி காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார். இதையடுத்து அவன் விமல்தான் என்பதை உறுதி செய்து கொண்ட போலீஸார் குடும்பத்தினருக்குத்தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தானாராமும், அவரது மனைவி ஜக்ரியும், விமலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுது கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

பின்னர் விமலிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, தன்னைக் கடத்தியது 2 இளைஞர்கள் என்றும், அவர்கள் அப்பாவின் கடைக்குபலமுறை வந்துள்ளனர் என்றும், அப்பாவுக்குத் தெரிந்தவர்கள்தான் என்றும் கூறினான்.

இதையடுத்து வேறு ஏதோ காரணத்திற்காகத்தான் விமலை அவர்கள் கடத்தியிருக்கிறார்கள் என்று கூறிய மாதவரம் துணை ஆணையர்கண்ணப்பன், விரைவில் குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காணாமல் போன சிறுவன் பத்திரமாக திரும்பியதால் போலீஸாரும், குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+