4 எஸ்.பிக்கள் மத்தியப் பணிக்கு மாற்றம்
டெல்லி:மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் நான்கு மண்டலங்களுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், ஜோத்பூர், வாரணாசி ஆகிய 5 மண்டலங்களுக்கானபணியிடங்கள் காலியாக இருந்தன. எஸ்.பி. அந்தஸ்திலான பதவிகள் இவை.
இப்பதவிகளில் அமர இந்தியா முழுவதுமிருந்து 50க்கும் மேற்பட்ட எஸ்.பிக்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களை அந்தந்த மாநிலஅரசுகள் பரிந்துரைத்திருந்தன.
தமிழக கியூ பிரிவு எஸ்.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம், தலைமைச் செயலக பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் சங்கர், ஆளுநரின் பாதுகாப்புஅதிகாரி திவாரி, கடலூர் எஸ்.பி. சஞ்சய்குமார் ஆகியோர் உள்ளிட்ட தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட நான்கு தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளும் மத்திய போதைப் பொருள் மண்டல எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தென் மண்டலத்திற்கு டேவிட்சன் தேவாசிர்வாத.ம், மேற்கு மண்டலத்துக்கு சங்கரும், மத்தியமண்டலத்துக்கு திவாரியும், வடக்கு மண்டலத்துக்கு சஞ்சய்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜோத்பூருக்கு மட்டும் வேறு மாநில அதிகாரிநியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் ஒரே துறையில், ஒரே மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றுகூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications