ஆன்மீகவாதிகள்-கருணாநிதி நட்பு தப்பா?
மதுரை:ஆன்மீகவாதிகளுடன் முதல்வர் கருணாநிதி நட்புறவோடு பழகி வருவதை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்று சுகாதாரத் துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மதுரையில் அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் ராமச்சந்திரன் பேசுகையில்,மதத் தலைவர்கள் மேற்கொள்ளும் நலத் திட்டங்களில் என்ன தவறு இருக்கிறது? அதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதிலும், ஆதரிப்பதிலும் என்ன தவறு இருக்கமுடியும்?
திமுக நிறுவனரான முன்னாள் முதல்வர் அண்ணாவும் கூட, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று கூறியுள்ளார். அதே அணுகுமுறையோடுதான்முதல்வர் கருணாநிதியும் செயல்பட்டு வருகிறார்.
முதல்வர் கருணநிதியின் வீட்டுக்கு சாய்பாபா போனதை சிலர் விமர்சிக்கிறார்கள். இது தவறானது, தேவையில்லாதது. அதேபோல சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதா அமிர்தானந்த மயி மடம் கட்டிக் கொடுத்துள்ள வீடுகளைத் திறக்க நாகையில் நடந்த விழாவில் மாதா அமிர்தானந்த மயியுடன்முதல்வர் ஒரே மேடையில் பங்கேற்றதையும் விமர்சிக்கிறார்கள்.
இந்த விமர்சனங்கள் தவறானவை, அவசியம் இல்லாதவை என்றார் ராமச்சந்திரன்.
விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தை அமிர்தானந்த மயி மடம் கோவை, திருச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அமல்படுத்தி வருகிறது. இதன்படிபொருளாதாரரீதியாக நலிவடைந்த நிலையில் உள்ள 5000 விதவைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு உதவிகளை மடம் வழங்குகிறது.
இதேபோல மடத்தின் சார்பில் சுய உதவித் திட்டத்தை மதுரை மேயர் தேன்மொழி தொடங்கி வைத்து பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.












Click it and Unblock the Notifications