ரயில்வேயும் மலையாளிகளும்: வீரபாண்டி ஆறுமுகம் கடும் எச்சரிக்கை
சேலம்:ரயில்வேயில் பெரும்பாலும் கேரள அதிகாரிகளே உள்ளனர். எனவேதான் சேலம் கோட்டம் அமைவதற்கு அவர்கள் முட்டுக்கட்டைபோடுகிறார்கள் என வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
சேலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம், சேலம் கோட்டம் அமைக்க கேரள அரசுஎதிர்ப்பு தெரிவித்து வருவது தொடர்பாக பேட்டி அளித்தார்.
ஆறுமுகம் கூறுகையில், கோவை, திருத்துறைப்பூண்டி, மேட்டுப்பாளையம், ஊட்டி, சேலம் சந்திப்பு, விருத்தாச்சலம், ஈரோடு-திருச்சி போன்றஇடைப்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள 842 கிலோமீட்டர் பாதையை இணைத்து சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்சேலம் பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நியாயமான கோரிக்கையை மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் ஏற்று, புதிய கோட்டம் அமைக்க ஒப்புதல் தந்தது. அதன் பின்னர்சிறப்பு அலுவலர் அமைக்கப்பட்டு, ரயில்வே பணியாளர் தங்கும் இடம், கோட்ட அலுவலக இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதையடுத்து பழைய சூரமங்கலத்தில் சேலம் இரும்பாலை அருகே 12 ஏக்கர் 91 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு வருகிற ஏப்ரல் 14ம் தேதிகால்கோள் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது கேரள முதல்வர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் ரயில்வே கோட்டம் அமைப்பதைத் தடுக்க கேரள முதல்வருக்குஎன்ன உரிமை உள்ளது?
தமிழக அமைச்சர் என்ற முறையிலும், சேலம் தொகுதியின் மக்கள் பிரதிநிதி என்ற முறையிலும் கேரள முதல்வருக்கு எனது கடும் கண்டனத்தைத்தெரிவித்துக் கொள்கிறேன்.சேலம் கோட்டத்தை எதிர்த்து 6ம் தேதி பாலக்காட்டில் கேரள எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளனர்.அவர்களுக்குப் பதிலுக்குப் பதில் தமிழகமும் போராட்டத்தில் ஈடுபட்டால் என்னாகும் என்பதை கேரள முதல்வர் உணர வேண்டும்.
இரு மாநில உறவுகளும் கெட்டுப் போகும், இதை உணராமல் கேரள முதல்வர் செயல்படுகிறார். ரயில்வேயில் பெரும்பாலும் கேரள அதிகாரிகளேஉள்ளனர். எனவேதான் சேலம் கோட்டம் அமைவதற்கு அவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களோ என்ற சந்தேகம் சாதாரண பொதுமக்கள்மனதில் எழுகிறது என்றார் ஆறுமுகம்.












Click it and Unblock the Notifications