15ம் தேதி 2வது கட்ட இலவச டிவி வினியோகம்
சென்னை:தமிழகத்தில் 2வது கட்டமாக வரும் 15ம் தேதி இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும் பணியை முதல்வர் கருணாநிதிதொடங்கி வைக்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு 30,000 பேருக்கு டிவிக்கள்வழங்கப்பட்டன.
இந் நிலையில் வரும் 15ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பம்மதுக்குளம் கிராமத்தில் 2ம் கட்டமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும்பணியை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
அதே நாளன்று மாவட்டங்களில் அமைச்சர்கள் இப்பணியை தொடங்கி வைப்பார்கள். காஞ்சிபுரத்தில் அமைச்சர்கள் அன்பழகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
தர்மபுரியில் ஸ்டாலினும், கோவையில் ஆற்காடு வீராசாமி, பொங்கலூர் பழனிச்சாமியும், பெரம்பலூரில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்ராசாவும், தஞ்சையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம், உபையதுல்லா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
சென்னையில், மாநகராட்சி மறு தேர்தல் நடைபெறவுள்ளதால், பின்னர் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications