For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் என்ஜீனியரிடம் சில்மிஷம்--வாட்ச்மேன் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கல்யாணமான பெண் சாப்ட்வேர் என்ஜீனியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்து வந்த காவலாளியை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் கவிதா. சாப்ட்வேர் என்ஜீனியரான இவரது கணவர் டாக்டர். அபிராமபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில்வேலை பார்த்து வருகிறார் கவிதா.

இவர் மீது அந்த நிறுவனத்தின் காவலாளி ரகுநாத் மோகம் கொண்டார். தினசரி கவிதா வேலைக்கு வரும்போது அவரிடம் வழிந்துள்ளார்.அத்தோடு அவரது செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்ப ஆரம்பித்தார்.

எப்போதும் உனக்குப் பக்கத்திலேயே இருக்கணும் போலிருக்கு. எனக்கும் உன் அலுவலகத்தில், பக்கத்திலேயே இருப்பது போல வேலை வாங்கிக்கொடு என்று தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பவே அதிர்ந்தார் கவிதா.

ரகுநாத்திடம், எனக்குக் கல்யாணமாகி விட்டது. இதுபோல இனிமேல் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டாம், இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்றுமிரட்டலாக எச்சரித்தார். ஆனாலும் ரகுநாத் அடங்கவில்லை.

இதையடுத்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் கவிதா. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திரகுநாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X