கல்யாண வீட்டில் பெண்ணை வெட்டி நகை கொள்ளை
சென்னை:திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணின் கையை வெட்டி அவர் அணிந்திருந்த 8 பவுன் நகைகளைதிருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்புநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என கல்யாண மண்டபத்தில் கூட்டம் நிரம்பிவழிந்தது. பெண் வீட்டைச் சேர்ந்த உறவினரான திருச்சியைச் சேர்ந்த பிரசாத் வந்திருந்தார். அவருடன் மனைவிமீனாட்சியும் (60) உடன் வந்திருந்தார்.
சிறு நீர் கழிப்பதற்காக கல்யாண மண்டபத்திற்குள் இருந்த கழிப்பறைக்குச் சென்றுள்ளார் மீனாட்சி. அப்போதுஆண்கள் கழிப்பறையிலிருந்து வந்த ஒரு நபர் மீனாட்சியைப் பின் தொடர்ந்து வந்துள்ளான்.
அவனைப் பார்த்து அதிர்ந்த மீனாட்சியை, கண் இமைக்கும் நேரத்திற்குள் கழிப்பறைக்குள் இழுத்துச் சென்றஅந்த நபர், தன்னிடமிருந்த கத்தியால், கழுத்திலும், கையிலும் வெட்டியுள்ளான். பின்னர் அவர் அணிந்திருந்த 8பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி விட்டான்.
அவன் போன பின்னர் மீனாட்சி ரத்தம் வழிய அலறியுள்ளார். இதையடுத்து அங்கு அனைவரும் ஓடி வந்தனர்.ரத்த வெள்ளத்தில் கிடந்த மீனாட்சியைப் பார்த்து அதிர்ந்த அவர்கள் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
உடனடியாக ராயபுரம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கல்யாண வீட்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications