சென்னை-சிங்கப்பூர் விமானங்கள் இரட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:சென்னை, பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவையை இரட்டிப்பாக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு பொது மேலாளர் சி.எப். ஃபூ கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், டெல்லி, சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களில் தற்போது இயக்கப்பட்டு வரும் விமான சேவையை அடுத்த 2ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு விரைவில் தினசரி விமான சேவைஅறிமுகப்படுத்தப்படும்.

தற்போது டெல்லி, சென்னைக்கு தினசரி ஒரு விமானம் இயக்கப்படுகிறது. பெங்களூருக்கு வாரம் 6 முறை விமான சேவை புழக்கத்தில் உள்ளது.

2009ம் ஆண்டுக்குள் சென்னைக்கும், டெல்லிக்கும் சிங்கப்பூரிலிருந்து தினசரி 2 விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில்இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே இதை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதேபோல கொல்கத்தாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவையை தற்போதுள்ள வாரம் நான்கு முறை என்பதற்குப் பதில் தினசரிசேவையாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.

தற்போது இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில்சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது சேவையைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் வாரம் 48 முறை விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்றார் ஃபூ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+