கங்கை-காவிரி இணைக்க கோரும் வீரபாண்டி
கோவை:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு நீதிமன்றத்திற்க்கு சென்றால், தமிழகமும் தீதிமன்றத்தை அணுகும் என வேளாண்மைத்துறைஅமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் 3வது சர்வதேச நிலத்தடி நீர் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொள்வதற்காக வந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது,
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பை எதிர்த்த கர்நாடக மாநிலம் நீதிமன்றத்திற்கு சென்றால், தமிழகத்தின் உரிமையைநிலைநாட்டுவதற்காக தமிழகமும் நீதிமன்றத்தை அணுகும்.
சேலம் ரயில்வே கோட்டம் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. இந்த கோட்டத்திற்காக ஊழியர்களின் குடியிருப்பு கட்டுவதற்காக நிலம்ஒதுக்கவில்லை என்று கூறுவது தவறானது. நாங்கள் இதற்காக ரயில்வே கோட்டத்திற்கு அருகிலேயே நிலம் ஒதுக்கியுள்ளோம். இது தொடர்பாககடிதம் முதன்மை செயலாளர் மூலம் தென்னக ரயில்வேக்கு அனுப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக கருத்தரங்கில் ஆறுமுகம் பேசுகையில்,
இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாடு நீர் பற்றாக்குறை அதிகம் உள்ள மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் பெரியஅளவிலான நீர் தேக்க திட்டங்கள் செயல்படுத்துவதற்கான வாயப்புகள் மிக குறைவாகவுள்ளது.
அதனால் ஏரிகள், குளங்கள் போன்றவற்றை பேணி காப்பது அவசியமாகிறது. இந்திய அலவில் நீர் உபரியாக உள்ள மாநிலங்களிலிருந்து நீர்பற்றாக்குறையாக உள்ள மாநிலங்கள் நீரை பெற்று பயன்படுத்தும் வகையில் கங்கை, காவிரி நதிகளை இணைக்க வேண்டியது அவசியம்.
முதற்கட்டமாக தென் மாநிலங்களில் மராட்டியம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள நதிகளைஇணைப்பதால் இந்த மாநிலங்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் காலங்களில் அந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு கடலில் வீணாககலக்கும் நீரை, வறட்சியால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு திருப்பி விட முடியும்.
எனவே முதற்கட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய அரசைவலியுறுத்துகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications