சென்னையில் பூட்டிய வீட்டில் 5 பிணங்கள்!!!
சென்னை:சென்னை திருவான்மியூரில் பூட்டிய வீட்டுக்குள் கணவன், மனைவி மற்றும் 3 மகள்கள் பிணமாக கிடந்தனர்.
திருவான்மியூர் தெற்கு மாட வீதியில் வசித்து வந்தவர் வேலாயுதம் (50). தச்சரான இவரது மனைவி ஈஸ்வரி (45), மகள்கள் கவிதா (23)விஜயலட்சுமி, சுகன்யா, ஷோபனா ஆகியோர். மகள்களில் கவிதா மட்டும் திருமணமானவர் ஆவார்.
இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரமாக திறக்காத காரணத்தால், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரிக்க சென்றனர்.
வீடு பூட்டி இருந்தததால், பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது, வேலாயுதம் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவி மற்றும்விஜயலட்சுமி, சுகன்யா, ஷோபனா ஆகியோர் பிணமாக கிடந்தனர்.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஈஸ்வரியும், விஜயலட்சுமியும் விஷம் குடித்தும், சுகன்யா, ஷோபனா இருவரும் கயிற்றால் இறுக்கப்பட்டும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த வோலாயுதம் மகள்கள் இருவரையும் கழுத்தில் கயிற்றை போட்டு நெரித்துகொன்றிருக்கிறார். அதன் பின் வேலாயுதம் தூக்கு போட்டுள்ளார்.
ஈஸ்வரியம் விஜய்லட்சுமியும் விஷம் அருந்தி இறந்துள்ளனர். தனது குடும்பமே இறந்து போன செய்தி அறிந்து மூத்த மகள் கவிதா அலறியடித்தபடிஓடி வந்து விழுந்து புரண்டு மயங்கி விழுந்தது மிகப் பரிதாபமாக இருந்தது.
இரண்டாவது மகளான விஜயலட்சும் தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், இது வேலாயுதத்திற்கு பிடிக்காதகாரணத்தினால் மகளை கொன்றுவிட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடு முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் தற்கொலைக்கு முன் ஈஸ்வரி எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், நாங்கள் மிகவும் சந்தோஷமாகவாழ்ந்து வந்தோம், இப்போது சந்தோஷமாக சாகிறோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் அல்ல என எழுதியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications