விலகும் தேமுதிக வேட்பாளர்கள்-கேப்டன் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:அதிமுக, மதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இல்லாததால் தங்களை எதிர்த்துப் போட்டியிடும் சுயேச்சைகள் மற்றும் தேமுதிகவேட்பாளர்களிடம் பேசி அவர்களை விலக வைக்கும் முயற்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

அதை நிரூபிப்பது போல பல வார்டுகளில் தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் விலக முடிவு செய்துள்ளனர். சில இடங்களில் பாஜக வேட்பாளர்களும்கூட விலக முன் வந்துள்ளனராம். இதனால் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியத்தின் 140வது வார்டு உள்பட பல வார்டுகளில் திமுக வேட்பாளர்கள்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலை உள்ளது.

மா.சுப்பிரமணியத்தின் வார்டில் தேமுதிக வேட்பாள-ரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது தியாகராஜன் என்ற ஒரே ஒருசுயேச்சை வேட்பாளர் மட்டும்தான் களத்தில் உள்ளார். அவரும் போட்டியிலிருந்து விலக ஒப்புக் கொண்டு விட்டாராம்.

135வது வார்டில் திமுக வேட்பாளர் காஞ்சனாவை எதிர்த்து களம் புகுந்த தேமுதிக வேட்பாளர் உமாவின் வேட்பு மனு தள்ளுபடியாகி விட்டது. 2சுயேச்சைகள்தான் உள்ளனர். அவர்களும் விலகப் போகிறார்களாம்.

இதுபோல 86, 91, 127, 138, 139, 141 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்களின் மனுக்கள்தள்ளுபடியாகி விட்டன.

11வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் கிருபாகரனை எதிர்த்தும், 20வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூப்சந்தரை எதிர்த்தும் மனுதாக்கல் செய்திருந்த தேமுதிக வேட்பாளர்கள் வாபஸ் வாங்கி விட்டனர்.

இப்படி வரிசையாக தே-முதிக வேட்பாளர்களும், சுயேச்சைகளும் வாபஸ் பெற்று வருவதால் பல வார்டுகளில் போட்டியே இல்லாமல் திமுக மற்றும்கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தனது வேட்பாளர்கள் வரிசை கட்டி போட்டியிலிருந்து விலகி வருவதால் அதிர்ந்து போயுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்த் அவர்களை

தனது கட்சியின் தலைமை அலுவலகம் உள்ள ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் தங்க வைத்து கண்காணித்து வருகிறார். அவர்களுக்குநேற்றிரவு சப்பாத்தி குருமா வழங்கப்பட்டது.

இன்று காலை இட்லி, பூரியும், மதியம் கோழி பிரியாணியும் வழங்கப்படுமாம். இந்த உணவு ஏற்பாடுகளை கேப்டனின் மச்சானும் கட்சியின்இளைஞரணித் தலைவருமான சுதீஷ் தான் முன்னின்று கவனித்து வருகிறார்.

இன்று மாலை வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான நேரம் முடிந்த பிறகே வேட்பாளர்களை மண்டபத்தில் இருந்தி ரிலீஸ் செய்வார்களாம்.

ஏற்கனவே முறைப்படி மனு தாக்கல் செய்யாத 14 தேமுதிக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இந் நிலையில்மற்றவர்களும் விலகுவதால் தனது இமேஜ், டேமேஜ் ஆகும் என கேப்டன் அஞ்சுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+