மழையால் கெட்ட கொல்கத்தா கிரிக்கெட் போட்டி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கும், இந்தியாவுக்கும் இடையே நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நேற்றுதொடங்கியது.

முதல் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. பகலிரவுப் போட்டியான இதில் இந்தியா டாஸ் வென்று இலங்கையை பேட்டிங் செய்யப் பணித்தது.ஜெயசூர்யவும், தரங்காவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

முதல் பந்திலிருந்தே ஜெயசூர்யா பட்டாசாக பொறிந்து தள்ளி ரன்களைக் குவித்தார். ஆட்டம் படு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில்,18.2 ஓவர்கள் பந்து வீசப்பட்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மழை பெய்ததால் மைதானத்தின் ஓரப் பகுதிகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்தது. தண்ணீரை உறிஞ்சுங்கள்இயந்திரங்களைக் கொண்டும், ஆட்களைக் கொண்டும் மைதானத்தில் தேங்கியிருந்த நீரை அகற்றும் முயற்சி மழை நின்ற பின்னர் தொடங்கியது.

இருப்பினும் ஆடுவதற்கேற்ற நிலைக்கு மைதானம் திரும்பவில்லை. மாலை 6. 50 மணிக்கு நடுவர்கள் ஆட்டக்களத்தையும் மைதானத்தையும் ஆய்வுசெய்தனர். பின்னர் 8.30 மணிக்கு 2வது ஆய்வு நடந்தது. அப்போது மைதானம் ஆடுவதற்கேற்ற நிலையில் இல்லை என்பதை நடுவர்கள் சைமோன்டஃப்பல், சுரேஷ் சாஸ்திரி ஆகியோர் கருதினர்.

இதையடுத்து இரு அணிகளின் கேப்டன்களுடன் நடுவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் போட்டி கைவிடப்படுவதாகஅறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

தங்களது நாயகன் கங்குலியின் ஆட்டத்தைக் காண படு ஆவலாக காத்திருந்த கொல்கத்தா ரசிகர்களுக்கு போட்டி பாதியில் கைவிடப்பட்டது பெரும்ஏமாற்றத்தை கொடுத்தது.

போட்டி நிறுத்தப்பட்டபோது இலங்கை அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை சேர்த்திருந்தது.

தரங்கா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஜெயவர்த்தனே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரு விக்கெட்டுகளைமுனாப் பட்டேல் வீழ்த்தினார்.

பின்னர் ஆட வந்த விக்கெட் கீப்பர் குமார் சங்கக்காரா அடித்து ஆடினார். ஆனால் ஸ்ரீசாந்த் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அதேசமயம், மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரான ஜெயசூர்யா இந்தியப் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்துக் கொண்டிருந்தார்.

42 பந்துகளில் அரை சதத்தைத் தொட்ட ஜெயசூர்யா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டம் தொடர்ந்திருந்தால்ஜெயசூர்யா சதம் போட்டிருக்கக் கூடும்.

சுருக்கமான ஸ்கோர்:

இலங்கை

உபுல் தரங்கா - 14, ஜெயசூர்யா - 63 (அவுட் இல்லை), சங்கக்காரா - 12, ஜெயவர்த்தனே - 0, அட்டப்பட்டு 5 (அவுட் இல்லை).

முனாப் பட்டேல் 7 ஓவர்கள் வீசி, 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுக்கள்.

ஸ்ரீசாந்த் 4.2 ஓவர்கள் வீசி 36 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+