ஜானகி எம்ஜிஆர் பள்ளி மாணவிகள் போராட்டம்
சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர்கள் நடத்தி வரும் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியை நீக்கப்பட்டதைக் கண்டித்துமுன்னாள் மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
![]() |
சென்னை வடபழனி முருகன் கோவில் பின்புறம் ஜானகி ராமச்சந்திரன் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை முன்னாள் நடிகர் தீபன்உள்ளிட்ட எம்.ஜி.ஆரின் உறவினர்களான சில மலையாளிகள் தான் நடத்தி வருகின்றனர். தீபன், பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில்நடித்தவர்.
பள்ளியை நிர்வகிப்பதில், தீபனுக்கும், மற்றவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உதவி தலைமை ஆசிரியைகிரிஜாவை தீபன் நீக்கி விட்டார். அவர் கடந்த 30 வருடங்களாக இங்கு பணியாற்றி வருகிறார்.
மாணவிகளிடம் தாயுள்ளத்தோடு பழகுபவர் கிரிஜா என்பதால் அவரது நீக்கம், மாணவிகளுக்கும், முன்னாள் மாணவிகளுக்கும் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று காலை முதல் முன்னாள் மாணவிகளும், தற்போது படித்து வரும் மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளி வளாகத்தில்போராட்டத்தில் குதித்தனர். மேலும் கிரிஜாவை உடனடியாக பதவியில் அமர்த்த வேண்டும் என்று கோரி பள்ளி முதல்வர் பானுவிடம் மனுவும்அளித்தனர்.













Click it and Unblock the Notifications