ப்ரீத்தி வர்மாவுடன் ஓடிய விந்தியாவின் மேனேஜர்!

Subscribe to Oneindia Tamil

சில காலத்துக்கு முன் நடிகை விந்தியாவுடன் தனிக் குடித்தனம் நடத்திய அவரது மேனேஜர் அருண், தற்போது நடிகை ப்ரீத்தி வர்மாவைபடப்பிடிப்பிலிருந்து கூட்டிக் கொண்டு ஓடி விட்டார். இதுகுறித்து ப்ரீத்தியின் பெற்றோர் சென்னை போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

18 வயசு புயலே, திருமகன், மூன்றாம் பவுர்ணமி உள்பட பல படங்களில் நடித்து கொண்டிருப்பவர் பிரீத்தி வர்மா. கிளாமர் நடிப்பிலும், குத்துப்பாட்டுக்களிலும் புயலைக் கிளப்பி வரும் ப்ரீத்தி வர்மா, சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

தெலுங்கு படபிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த 10ம் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு ப்ரீத்தி தனியாக சென்றார். அதன் பிறகுஅவர் திரும்பி வரவில்லை. படப் பிடிப்புக்கும் வரவில்லை.

இதையடுத்து ப்ரீத்தியை அவரது தந்தை பரத்தும், தாயார் ரம்யாவும் செல்போனில் தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லை. இந் நிலையில்அருண் என்பவருடன் ப்ரீத்தி வர்மா கடைசியாக சென்றதாக தகவல் கிடைத்தது.

இந்த அருண் வேறு யாருமில்லை, விந்தியாவின் மேனேஜர் தான். சில வருடங்களுக்கு முன் நடிகை விந்தியா தனது வீட்டை விட்டுவெளியேறியபோது இவரது வீட்டில் தான் தங்கினார். இருவரும் சில காலம் தனியாக குடித்தனமும் நடத்தினர் (கல்யாணம் செய்துகொள்ளாமலேயே)

அருணின் வேலையை நடிகைகளை கூட்டிக் கொண்டு அரபு நாடுகளுக்குப் போய் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதுதான். நடிகைகள், துணைநடிகைகளுடன் அதிகம் புழங்குபவர் அருண்.

அருணுடன் தங்களது மகள் போனதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அருணை தொடர்பு கொண்டு தாயார் ரம்யா பேசியுள்ளார். அதற்கு அவர்,என்னுடன்தான் ப்ரீத்தி வர்மா உள்ளார். அவரை மும்பைக்கு அழைத்து வந்துள்ளேன். இனிமேல் அவர் உங்களிடம் வர மாட்டார், எவ்வளவு பணம்வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறினாராம்.

இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ரம்யா, உடனடியாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரைப் பதிவு செய்துஅருணைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அருணும், ப்ரீத்தி வர்மாவும் தற்போது ஆந்திராவில்தான் உள்ளதாக கூறப்படுகிறது. இருவரையும் பிடித்தால்தான் ப்ரீத்தியை விருப்பப்பட்டுஅருண் கூட்டிச் சென்றாரா அல்லது கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றாரா என்பது தெரிய வரும்.

அருணுடன் ஓடிப் போன விந்தியா நாளடைவில் சினிமாவில் மார்க்கெட் இழந்து கலை நிகழ்ச்சிகளுக்குப் போக ஆரம்பித்தார் என்பதுநினைவிருக்கலாம். இந்த நிலையில் ப்ரீத்தி வர்மாவை அருண் அழைத்துச் சென்று தனது கஸ்டடியில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதுதிரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாதத்துக்கு முன் ப்ரீத்தியை கலை நிகழ்ச்சிக்காக அழைத்துச் சென்றார் அருண். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகசொல்கிறார்கள்.

ஆனால், ப்ரீத்தியை அருண் கடத்திக் கொண்டு தான் போயிருக்கிறார் என பெற்றோர் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+