மீனாட்சி கொலை வழக்கு-2 சாட்சிகள் பல்டி!
கரூர்:கரூர் மாவட்டம் குளித்தலை ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கில் முக்கிய சாட்சிகள் இருவர் பல்டி அடித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்திய குளித்தலை ஆசிரியை மீனாட்சி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக 2 பேர் சேர்ந்து அவரைக் கொன்றதுகடந்த ஆண்டு தெரிய வந்தது.
சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் மீனாட்சி கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு வாழைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டதும், அவரதுடிவிஎஸ்-50 ஒரு பள்ளம் தோண்டப்பட்டு புதைக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தற்போது கரூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. நீதிபதி அய்யப்பன் முன்னிலையில் நடந்தவிசாரணையின்போது 19 பேர் சாட்சியம் அளித்தனர்.
கிராம நிர்வாக அதிகா>கள் ரகுபதி, சந்தானம், மீனாட்சியின் மொபட்டை அடையாளம் காட்டிய சுந்தரம், தங்கராஜ், ராமதுரை, சந்திரமோகன், நிலகுத்தகைதாரர் சந்திரசேகரன், கைது செய்யப்பட்ட குமார் என்பவரின் அண்ணன் அறிவழகன், மைத்துனர் செந்தில்குமார், தெய்வமணி என்கிறராணி, மீனாட்சியின் நகையை அழித்த பன்னீர் செல்வம், சிவக்குமார், அடகுதாரர்கள் அரவிந்தன், மீனாட்சி சுந்தரம், ராசு, விமலா, கணேசன்,பவுன்ராஜ், வீரப்பன் ஆகியோர் சாட்சியம் அளித்தவர்கள் ஆவர்.
இவர்களில் தெய்வமணியும், சந்தானமும் சாட்சியத்தை மாற்றிச் சொல்லியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெய்வமணி கூறுகையில், எனது பெயர் ராணி அல்ல, தெய்வமணி. மீனாட்சியின் நகையை நான் அடகு வைக்கவில்லை என்றார்.
அதேபோல சந்தானம் கூறுகையில், அதிகாரிகள் கூறியபடிதான் நான் சாட்சியம் அளித்தேன். ஒப்புதல் வாக்குமூலம் எதையும் நான் கூறவில்லைஎன்றார்.
இரு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்ததால் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications