விபச்சாரம்-பிரபல மாமா கன்னட பிரசாத் கைது
சென்னை:பிரபல விபச்சாரக் கும்பல் தலைவன் கன்னட பிரசாத்தை, சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையிலான போலீஸ் குழுநட்சத்திர ஹோட்டலில் வைத்து வளைத்துப் பிடித்தது.
கன்னட பிரசாத் ஒரு விபச்சார புரோக்கர். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திவருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இவர் தனது கிளையை பரப்பினார்.
பலமுறை பிடிக்க முயன்றும் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி வந்தார். பெரும் அழகிகள் கூட்டத்துடன் அட்டகாசம் செய்து வந்த கன்னடபிரசாத்தை வளைத்துப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர்.
இந் நிலையில் சென்னையில் 3 நாட்களுக்கு முன்பு பிரசாத்தின் முக்கியக் கூட்டாளியான பாரதிகண்ணன் என்பவர் 3 அழகிகளுடன் போலீஸா>டம்சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் பிரசாத் குறித்த முக்கிய துப்பு போலீஸாருக்குக் கிடைத்தது.
இதையடுத்து எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது 3வது மனைவி நீத்துவுடன் தங்கியிருந்த பிரசாத்தை பிடிக்க போலீஸ் படைஅங்கு விரைந்தது. கூடுதல் ஆணையர் ஜாங்கிட்டே இந்தப் படைக்குத் தலைமை தாங்கி நேரடியாக வேட்டையில் குதித்தார்.
நட்சத்திர ஹோட்டலை சுற்றி வளைத்த போலீஸார் பிரசாத் எங்கும் தப்பி விட முடியாதபடி வலுவான அரண் அமைத்தனர். பின்னர் ஜாங்கிட்ஹோட்டலுக்குள் சென்று அறை அறையாக சோதனை போட்டார். இதில் பிரசாத்தும், நீத்துவும் பிடிபட்டனர்.
இருப்பினும் பிரசாத் பிடிபட்டது குறித்து போலீஸ் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் பிரசாத்பிடிபட்டது உண்மைதான் என்று காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications