காவிரி: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில்சென்னையில் நடைபெறுகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தமிழகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள்தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளன. ஆனால் முதல்வர் கருணாநிதி, இடைக்கால தீர்ப்பில் கூறப்பட்டதை விட கூடுதல் நீரே தமிழகத்திற்குக்கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதேசமயம், தீர்ப்பில் உள்ள பாதகங்கள் குறித்து நடுவர் மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் பாமகஉள்ளிட்ட கட்சிகளின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். திமுக கூட்டணிக் கட்சிகள் தவிர அதிமுக,மதிமுக, பாஜக உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன.
இந்தக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விரிவாக அலசப்படவுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், சட்ட வல்லுனர்கள் ஆகியோருடனும் தீர்ப்பு குறித்து அரசு விவாதிக்கும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications