செல் போனால் வந்த பூசல்: பெண் உயிர் ஊசல்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:செல் போன் வாங்கியதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோபமடைந்த பெண், தீக்குளித்துத் தற்கொலைக்குமுயன்று உயிருக்குப் போராடி வருகிறார். காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகி ஆபத்தான நிலையில்சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரிய காஞ்சிபுரம் சேலைராமசாமி தெருவில் வசித்து வருபவர் கேசவன் (45). ரைஸ்மில் உரிமையாளர்ஆவார். இவரது மனைவி ராணி (40).

ராணி, தனது கணவருக்குத் தெரியாமல் ஒரு செல் போன் வாங்கியுள்ளார். இரவு வீடு திரும்பிய கேசவன்,மனைவியிடம் இருந்த புதிய செல்போனைப் பார்த்து ஏது இது என்று கேட்டுள்ளார்.

புதிதாக வாங்கியதாக ராணி கூறவே கோபமடைந்தார் கேசவன். இப்போது செல்போன் வாங்க வேண்டியஅவசியம் என்ன வந்தது என்று கேட்டு சண்டை போட்டுள்ளார். கணவனும், மனைவியும் காரசாரமாக பேசிக்கொண்டனர்.

செல் போன் வாங்கியதை கணவர் கண்டித்ததால் கோபம் கொண்டார் ராணி. ஆத்திரத்தில் சமையல் அறையில்இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் மீது ஊற்றிக் கொண்டு தீவைத்தார்.

தீயின் வெப்பம் தாளாமல் அவர் போட்ட அலறலால் பயந்து ஓடி வந்த கேசவன், தீயில் கருகிக் கொண்டிருந்தராணியைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பிடித்துக் கொண்டது.

பின்னர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், கணவன், மனைவியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+