பார்வையற்றோர்க்கு உதவும் ஜிபிஎஸ் செல்போன்!
பெங்களூரூ:பார்வை இல்லாதவர்களுக்கு கைகொடுக்கும் விதமாக புதிய செல்போன் தொழிநுட்பத்தை சென்னையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள்அறிமுகம் செய்துள்ளன.
பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துடன் இணைந்து. சென்னையைச் சேர்ந்த லேட்டிஸ் பிரிட்ஜ், ஸ்பேசியல் டேடா ஆகியநிறுவனங்கள் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.
ஜிபிஎஸ் (குளோபல் பொஷிசனிங் சாட்டிலைட் சிஸ்டம்) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர்.
இது பார்வையற்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதன்படி செல்போனில் ஒரு குறிப்பிட்ட என்னை அழுத்தி நான் இப்போது எங்கேஇருக்கிறேன் என்று கேட்டுவிட்டு கட் செய்ய வேண்டும். அப்போது அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற செய்தி அவர்களுக்கு கிடைக்கும்.
அவர்கள் செல்போன் மட்டும் வைத்திருந்தால் போதும் ஊரையே சுற்றி வந்துவிடலாம். அது போல ஊருக்கு புதியவர்களுக்கும் இது மிகவும்பயன்படும்.












Click it and Unblock the Notifications