நஷ்டத்தில் மதுரை-திருச்சி விமான நிலையங்கள்!
சென்னை:தென்னிந்தியாவிலேயே திக லாபம் ஈட்டித் தரும் விமான நிலையமாக சென்னை விமான நிலையம் விளங்குகிறது. திருச்சி மற்றும் மதுரை விமானநிலையங்களால் ஆண்டுக்கு தலா ரூ. 4.5 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
2005-2006ம் நிதி ஆண்டில் சென்னை விமான நிலையம் தான் மற்ற விமான நிலையங்களை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு ரூ. 192 கோடியைலாபமாக ஈட்டியுள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக லாபம் ஈட்டித்தரும் விமான நிலையம் என்ற பெயர் வாங்கியுள்ளது.
சென்னைக்கு அடுத்து பெங்களூர் விமான நிலையம் ரூ. 121 கோடியையும், ஹைத்ராபாத் விமான நிலையம் ரூ. 73 கோடியையும் ஈட்டியுள்ளது.
கொச்சி சர்வதேச விமான நிலையம் ரூ. 20.75 கோடியையும், கோழிக்கோடு ரூ. 14.4 கோடியும், திருவனந்தபுரம் 2.65 கோடியும் லாபம்ஈட்டியுள்ளன.
தென்னிந்தியாவில் உள்ள 21 விமான நிலையங்களில் மேலே சொன்னவை மட்டும் தான் லாபம் ஈட்டுகின்றன. மற்றவை அனைத்தும்நஷ்டத்தைத்தான் சந்தித்து வருகின்றன.
இந்த நஷ்டப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மங்களூர் விமான நிலையம். இந்த வெட்டி விமான நிலையத்தால் ஆண்டுக்கு ரூ. 11.14 கோடிநஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு அடுத்து திருச்சி விமான நிலையம் ரூ 4.57 கோடியையும், மதுரை விமான நிலையம் ரூ. 4.54 கோடியையும்முழுங்கி நஷ்டத்தை சந்தித்துள்ளன.
அடுத்தபடியாக விஜயவாடா விமான நிலையம் ரூ. 3.76 கோடியும், ஹூப்ளி விமான நிலையம் ரூ. 1.28 கோடியும், ராஜமுந்திரி விமான நிலையம்ரூ. 62.38 லட்சமும், தூத்துக்குடி விமான நிலையம் ரூ. 31.69 லட்சமும், சேலம் விமான நிலையம் ரூ. 25.8 லட்சமும், வேலூர் விமான நிலையம்6.88 லட்சமும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.












Click it and Unblock the Notifications