உலக ஐ.டி. நிறுவனங்களில் 6ல் ஒருவர் இந்தியர்!
சென்னை:உலக அளவில் முன்னணியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்களில் 6ல் ஒருவர் இந்தியராக இருக்கிறார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்தியர்களைத் தவிர்த்து எந்த ஒருதகவல் தொழில்நுட்ப நிறுவனத்தையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
உலக அளவில் முன்னணியில் உள்ள ஐபிஎம், அசென்ச்சர், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், ஹெவல்லெட் பேக்கார்ட் உள்ளிட்ட முன்னணிநிறுவனங்களில் இந்தியர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர்.
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மொத்தம் 9.9 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 1.62 லட்சம் பேர் இந்தியர்கள்.
இந்த நிறுவனங்களின் உயர் பதவிகளிலும் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இவற்றில் ஐபிஎம் நிறுவனத்தில்தான் அதிக அளவில் இந்தியர்கள் உள்ளனர். அதாவது 53,000 இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உலக அளவில் முன்னணியில் உள்ள சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மொத்த ஊழியர்களும், இந்தியர்களின் எண்ணிக்கையும்வருமாறு:
ஐபிஎம்: மொத்த ஊழியர்கள்-3,29,373 (இந்தியர்கள்-53,000)
அசென்ச்சர்: 1,46,000 (27,000)
ஹெவ்லட் பெக்கார்ட்: 1,50,000 (25,000)
ஈடிஎஸ்: 1,20,000 (20,000)
ஆரக்கிள்: 68,000 (18,000)
கேப் ஜெமினி: 68,000 (12,000)
இந்த நல்ல நியூசை போடும்போதே உலக மக்கள் தொகையிலும் 6ல் ஒருவர் இந்தியர் என்ற சோகத்தையும் சேர்த்தே சொல்ல வேண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications