கேரளாவுக்கு எதிராக நாளை திருப்பூர் பந்த்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:சேலம் கோட்டம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கேரளாவைக் கண்டித்து கோவையை தொடர்ந்து நாளை திருப்பூரில் முழு அடைப்புநடைபெறவுள்ளது.

சேலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க மத்திய அரசு தீர்மானித்தது. அதன் அடிப்படையில் சேலம் கோட்டத்தில்திருப்பூர், கோவை, போத்தனூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டு சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில் சேலம் ரயில்வே கோட்டத்தை செயல்பட விடாமால் தடுப்பதற்கான முயற்சிகளில் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும்,அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதை தொடர்ந்து நாளைமேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடத்திலும் பந்த் நடத்தப்படுகிறது.

அதன்படி திருப்பூரிலும் பல்லடத்திலும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பஸ், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது.சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்படவுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+