சந்தேக மாப்பிள்ளையை நிராகரித்த மணப்பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:கல்யாணத்திற்கு முன்பே நடத்தையில் சந்தேகப்பட்ட மணமகனை, தாலி கட்டிக் கொண்ட அடுத்த நிமிடமே தாலியை கழற்றி எறிந்து புறக்கணித்துவிட்டுச் சென்றார் மணமகள்.

சென்னை வளசரவாக்கம் வெங்கட சுப்பிரணி நகரைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், ஆழ்வார் திருநகரைச் சேர்நத வள்ளிமயிலுக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டது.

Valli

திருமணத்தையொட்டி கல்யாண மண்டபத்தில் அனைவரும் கூடியிருந்தனர். இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது மண்டபத்திற்குவந்திருந்த ஒருவருடன் வள்ளிமயில் பேசியுள்ளார். இதைப் பார்த்த வெங்கடசுப்ரமணி, வள்ளியின் நடத்தை குறித்து சந்தேகமடைந்தார்.

இது வள்ளியின் காதுக்குச் சென்றது. தாலி கட்டுவதற்கு முன்பே இப்படி சந்தேகப்படுபவர் நாளை எப்படியெல்லாம் சநதேகப்படுவாரோ என்றுநினைத்தார் அவர். என்ன செய்வது என்ற குழம்பிய நிலையிலேயே மணவறையில் அமர்ந்தார். கலயாணமும் நடந்து முடிந்தது.

அக்னி வலம் வருமாறு அய்யர் கூறவே, வெங்கடசுப்ரமணியின் கையைப் பிடித்தபடி வலம் வந்தார் வள்ளி. அப்போது திடீரென கோபமடைந்தவள்ளி, கையை உதறி விட்டு தாலியைக் கழற்றி வீசினார். மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறிய அவர் அங்கிருந்து வெளியேறி விட்டார்.

வள்ளியின் செயல் அங்கு கூடியிருந்தவர்களை பெரும் அதிர்சசியில் ஆழ்த்தியது. ஏன் வள்ளி இப்படிச் செய்தார் என்று விசாரித்தபோதுகல்யாணத்தில் ஏற்கனவே வள்ளிக்கு இஷ்டம இல்லையாம். இருந்தாலும் பெற்றோர் வற்புறுத்தலால்தான் அவர் கல்யாணத்துக்குச் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில், வெங்கடசுப்ரமணி சந்தேகப்படவே, அதை காரணமாக வைத்து அவர் தாலி கட்டிய அடுத்த நிமிடமே மணமகனை துறந்து விட்டுவெளியேறி விட்டார்.

ஆனால் தனது மகளுக்கு மன நலம் சரியில்லை என்று வள்ளியின் தாயார் புஷ்பம் கூறியுள்ளார். காரணம் பல கூறப்பட்டாலும், வள்ளியின் செயல்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+